எழுத்தறிவிலாதோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கருணாநிதியின் பேட்டி எதையும் படிப்பதில்லை.

சமீபத்தில் கொலைஞர் கருணாநிதியின் பேட்டி ஒன்று படிக்கும் நிர்பந்ததிற்கு ஆளானேன், அதில் நெடுமாறன் கோஷ்டியினர் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு பழியை உலகத்தமிழர் மீது சுமத்த திட்டமிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.. இவர் பேட்டியை எப்போது படித்தாலும் சகித்துக்கொள்ள நிறைய சிரமப்படத்தான் வேண்டும். அதுசரி எத்தனை முறை நரகலை மிதித்தாலும் அறுவெருப்பாகத்தானே இருக்கும். நெடுமாறன் கோஷ்டியினர் அதிகபட்சமாக உண்ணாவிரதத்தை தாண்டி எதுவும் செய்யமுடியாது என்பது ராஜபக்ஷே உட்பட எல்லோரும் அறிந்த விஷயம்.. இதுகூடவா கருணாவுக்கு தெரியாது ?? இதைக்கூட அறியாத அளவுக்கு அவர் முட்டாளும் அல்ல.. மாறாக இந்த வகையிலான பதில்கள் மூலம் அவர் நாம் எந்த அளவு முட்டாள்கள் என்பதை சோதித்து உறுதி செய்துகொள்கிறார் அவ்வளவே.

இந்த வகை பதில்கள் ஒன்றும் அவருக்கு புதியதல்ல.. அவர் முதுகில் முக்கால் இன்ச்சுக்கு ஒரு அறுவைசிகிச்சை செய்தபோதே ஒரு பேட்டி அளித்தார், ( அவர் கேட்டு அவரே பதில் சொன்னது) தான் ஒரு உயிருக்கு ஆபத்தான சிகிச்சை பெற்று திரும்பி இருப்பதாகவும் ஆனால் சிலர் இந்த ஆட்சி போனால் சரி என்று நினைப்பதாகவும்.. ஆட்சிமட்டுமல்ல தானே போனாலும் சரி என்று நினைப்பதாக ” உருக்கமாக ” குறிப்பிட்டார். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அழகிரியை கொல்ல மார்க்சிஸ்ட் கட்சியினர் முயற்சி செய்வார்களோ என அஞ்சுவதாக புலம்பினார். அதை அழகிரியே ரசிக்கவில்லை என்பது ஒருபுறம், அறிவாலயம் போனபோது அவர் வாங்கிக்கொடுத்த காப்பி டீ ஐ பட்டியல் போட்டு சொல்வாரோ என்று பயந்துபோயிருந்த காம்ரேட்டுகள் இந்த கருத்தால் சற்று ஆறுதல் அடைந்தார்கள். கருணாநிதியின் இந்த பேட்டிக்கு பிறகு மதுரை மக்கள் சிலர் ஒரு நப்பாசையில் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்களித்தார்களா என்கிற கோணமும் ஆராய்ச்சிக்குரியது.

உன்மையில் மக்கள் தலைவர்கள் மரணத்திற்க்கு அஞ்சமாட்டார்கள் ( கருணாநிதி பற்றி பேசும்போது இதென்ன மக்கள் தலைவர்கள் பற்றி பேச்சு..), ஆனால் சோனியாவின் காலைக்கழுவினால்த்தான் எந்த உரிமையையும் பெற முடியும் என பட்டவர்த்தனமாக பேசுபவர், தனக்குத்தானே பட்டம் தந்து, தன்னை சொறிந்துவிடும் ஆட்களை மேடையேறி சொறியச்சொல்லி ரசிக்கும் இவர் உயிருக்கு பயப்படுவது யதார்தமானது. இவர் அந்த குற்றச்சாட்டை ஒரு பலவீனமானவர் மீது சுமத்துவதுதான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உண்மையில் ஈழ ஆதரவு இயக்கங்களில் ஈனஸ்வரத்தில் முனகும் அளவில் மட்டுமே தமிழக இந்திய அரசுகளை விமர்சிப்பவர் நெடுமாறன் ( புலிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதுதான் இவரின் அதிகபட்ச வாக்கியமே. ), ஆனாலும் நெடுமாறன் இவரின் இலக்காவதற்க்கு காரணம் அவருக்கு கிடைக்கும் ஊடக கவனம்தான்.

உயிருக்கு ஆபத்து என்கிற இவரின் புலம்பல் பேட்டிகளை இதுவரை மக்கள் சாலையில் கிடக்கும் செத்த எலியை கவனிக்கும் அளவுக்குக்கூட கவனிக்கவில்லை.. இந்த முறையும் அதுதான் நடக்கும் என்பதும் அவர் அறியாதது அல்ல.. பிறகு ஏன் வேலை மெனக்கெட்டு இவர் இழவு ஒப்பாரி வைக்கவேண்டும் ? காரணம் மிக எளிமையானது. அவர் அவருடைய கட்சிக்காரர்களுக்கு ஒரு சிக்னல் கொடுத்திருக்கிறார்., அவ்வளவே. சில நாட்களுக்கு முன்னால் மானமிகு வீரமணி ஒரு அறிக்கையில் சொன்னார் ” இலங்கை பிரச்சினையில் சிலர் தொடர்ந்து கருணாநிதியை குறை சொல்கிறார்கள். இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது “, வீரமணி குரைப்பதற்க்கு பெரியார் விருது.. தொண்டர்களை உசுப்பிவிட “உயிருக்கு ஆபத்து ” எனும் சென்டிமென்ட். இனி கழக உடன்பிறப்புகள் வீரமணியை பின் தொடர்ந்து சவாடல் அறிக்கைகளை வெளியிட்டு கருணாநிதியின் பணிச்சுமையை குறைபார்கள்,( மற்றபடி கருணாநிதிக்கு அச்சுறுத்தல் என்பது மயிர்பிடி சண்டை போடும் அவரது குடும்பத்திலிருந்துத்தான் வரமுடியும் என்பதை அவர் தொண்டர்கள் அறிவார்கள்) ஆக கருணா வின் கணக்குகள் மிக நேர்த்தியானவை. இல்லாவிட்டால் இத்தனை பெரிய, பதவி வெறியும் பொறாமையும் கொண்ட குடும்பத்தை அவரால் சமாளிக்க முடியாது.

ஒரு ஈழ ஆதரவு கூட்டத்தில் என் அருகில் நின்ற நடுத்தர வயதுக்காரர் நாம் எல்லோரும்(தமிழகத்து தமிழர்கள்) நரகத்திற்க்குத்தான் போவோம் என்றார். அன்று அவருக்கு சொல்ல என்னிடம் பதில் இருந்திருக்கவில்லை.

இப்போது அவரைப்பார்த்தால் சொல்வேன் ” மேலுலகில் உங்களை நரகத்திற்க்கு போகுமாறு கட்டளையிடும்போது அவர்களிடம், கருணாநிதி முதல்வராய் இருந்தபோது நான் தமிழகத்தில்தான் வசித்தேன் என்று சொல்லுங்கள். அவர்கள் நம் கருணை மனுவை பரிவுடன் பரிசீலிப்பார்கள். ஏனெனில் ஒரு குற்றத்திற்காக நாம் இருமுறை தண்டிக்கபடுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்”

என் சமாதானத்தை நம்பாதவர்கள் முதல்வரின் இந்த கேள்வியை படியுங்கள் ( அவரிடம் அவரே கேட்டது ) ” இலங்கை பிரச்சினை குறித்து தாங்கள் எழுதிய கடிதத்தையொட்டி மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வந்துள்ளதே ? “

உன்னைப்போல் ஒருவன்.. நம்மைப்போல் ஒருவனல்ல, அர்ஜுன், விஜயகாந்த் வரிசையில் இன்னொருவன்.

கலைஞானி கமல், தீவிரவாதத்தை கண்டு மனம் வெறுத்து அதை களைய எண்ணும் ஒரு சாமான்யனின் பாத்திரத்தில் நடித்திருப்பதாக சொன்னதாலும் நான் இந்தியில் வந்த ” புதன்கிழமை ” படத்தை நான் பார்க்காததாலும் உ.போ.ஒ படம் பார்க்க போனேன். அதற்கான எனது விமர்சனம்தான் மேலே உள்ள வரிகள்.
கதை எல்லோரும் அறிந்ததே, அதற்க்குள் நாம் போகவேண்டாம். ஆனால் அதில் அவர் சொல்லும் நீதி முட்டாள்தனமானது, அராஜகமானது. எப்படி தீவிரவாதம் உடனடியாக மக்களை கொல்லுகிறதோ அப்படியே தீவிரவாதத்தில் ஈடுபடுவோரும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் படம் சொல்லும் பச்சையான செய்தி. கொஞ்சம் நிதானமாக யோசனை செய்து பாருங்கள், இதே கருத்தைத்தான் மத வேறுபாடு இல்லாமல் எல்லா தீவிரவாதிகளும் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஏதோ ஒரு கோபத்தின் எதிர்வினை என்றுதான் அவர்கள் செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கிறார்கள். ஒன்று இந்த கதையின் நாயகன் ஒரு வில்லனாக கருதப்படவேண்டும் இல்லவிட்டால் எல்லா தீவிரவாதிகளும் அவரளவில் ஒரு ஹீரோ என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் ( படத்தில் வரும் வசனத்தைப்போல இதற்கும் பைனரியாகத்தான் பதில் சொல்ல முடியும் ).
சரி கமல் விரும்பி ஒரு படம் பண்ணும்போது அது அவர் விரும்பிய கருத்தைத்தான் கொண்டிருக்கும். அதில் நீ எப்படி தலையிடலாம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கருத்தாகத்தான் இருந்திருக்கும்., கமல்ஹாசன் ஒரு நடிகனாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தால். தான் ஒரு முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர் என காட்டிக்கொள்கிற கமல்தான் நம்மை கேள்வி கேட்கத்தூண்டுகிறார். அதெப்படி சகல தீவிரவாத செயலையும் பட்டியல் போட்டு பேசிவிட்டு வெறுமனே இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் கொல்வது காமன்மேன் செய்யும் காரியமா அல்லது ஸ்டுப்பிட்மேன் செய்யும் காரியாமா ?? ( ஒரு இந்துவை கூட கொல்லுகிறாரே என்று படத்தின் கதாநாயகனை போலவே சொல்லாதீர்கள், அந்த பாத்திரமும் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கு உதவுபவராகத்தான் சித்தரிக்கப்படுகிறது).
வழக்கமான தமிழ் சினிமாக்களைபோல இந்தப்படமும் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாகத்தான் இருக்கமுடியும் என்பதை மறைமுகமாக பார்ப்பவர் மனதில் பதியவைக்கிறது. தன் மனைவியும் குழந்தையும் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டதை சொல்லும் காட்சியில் கூட அது அவன் மூன்றாவது மனைவி என குறிப்பிட்டு கலவரத்தின் வீரியத்தை குறைப்பதை எதேச்சையானது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? ( ” அதான் மீதி ரெண்டு பொண்டாட்டி இருக்கே.” என்கிற வசனம் மூலம் இதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக கவனமாக நிறம் மாற்றுகிறார்கள் )
கமல் மற்ற தமிழ் படைப்பாளிகள் மாதிரி இந்து தீவிரவாத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை, ஆனால் அதை நாசூக்காக தொட்டுக்காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். அதனால்தான் அவர் பாத்திரம் குஜராத் கலவரத்திற்க்கு கண்ணீர் மட்டும் வடிக்கிறது ஆனால் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிக்கோ மரணதண்டனை வழங்குகிறது. இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்ய பயப்படும் இந்த சினிமாக்காரர்கள்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளை படத்திற்க்கு படம் துவைத்து காயப்போடுகிறார்கள், இதிலிருந்தே நாம் எந்த தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.யாரேனும் இது ஒரு ரீமேக் படம்தானே என்று சொன்னால், மன்னிக்கவும் ஹிந்திக்காரன் கொடுத்ததை வாந்தி எடுக்க உலகநாயகன் தேவையில்லை. மேலும் எடுத்த வாந்தியை சுத்தம்தான் செய்ய வேண்டும்… அது உலகநாயகனுடையதாக இருந்தாலும்.
படத்தில் நாம் குறிப்பிட ஒரு விசயம் உண்டு. நாயகனால் கொல்லப்படும் ஒரு தீவிரவாதி சொல்வார் , பெஸ்ட் பேக்கரியில் என் மனைவியும் பிள்ளையும் கொல்லப்பட்டபோது எந்த சாமியும் வரவில்லை என்று. படத்தில் அது வெறும் கேள்வியாக மட்டுமே முடிந்துவிடுகிறது. உண்மையில் அந்த கேள்விக்கான நம்முடைய நியாயமான பதிலில்தான் தீவிரவாத்திற்கான தீர்வும் இருக்கிறது.

கலைஞானி கமல், தீவிரவாதத்தை கண்டு மனம் வெறுத்து அதை களைய எண்ணும் ஒரு சாமான்யனின் பாத்திரத்தில் நடித்திருப்பதாக சொன்னதாலும் நான் இந்தியில் வந்த ” புதன்கிழமை ” படத்தை நான் பார்க்காததாலும் உ.போ.ஒ படம் பார்க்க போனேன். அதற்கான எனது விமர்சனம்தான் மேலே உள்ள வரிகள். கதை எல்லோரும் அறிந்ததே, அதற்க்குள் நாம் போகவேண்டாம். ஆனால் அதில் அவர் சொல்லும் நீதி முட்டாள்தனமானது, அராஜகமானது. எப்படி தீவிரவாதம் உடனடியாக மக்களை கொல்லுகிறதோ அப்படியே தீவிரவாதத்தில் ஈடுபடுவோரும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் படம் சொல்லும் பச்சையான செய்தி. கொஞ்சம் நிதானமாக யோசனை செய்து பாருங்கள், இதே கருத்தைத்தான் மத வேறுபாடு இல்லாமல் எல்லா தீவிரவாதிகளும் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஏதோ ஒரு கோபத்தின் எதிர்வினை என்றுதான் அவர்கள் செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கிறார்கள். ஒன்று இந்த கதையின் நாயகன் ஒரு வில்லனாக கருதப்படவேண்டும் இல்லவிட்டால் எல்லா தீவிரவாதிகளும் அவரளவில் ஒரு ஹீரோ என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் ( படத்தில் வரும் வசனத்தைப்போல இதற்கும் பைனரியாகத்தான் பதில் சொல்ல முடியும் ). சரி கமல் விரும்பி ஒரு படம் பண்ணும்போது அது அவர் விரும்பிய கருத்தைத்தான் கொண்டிருக்கும். அதில் நீ எப்படி தலையிடலாம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கருத்தாகத்தான் இருந்திருக்கும்., கமல்ஹாசன் ஒரு நடிகனாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தால். தான் ஒரு முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர் என காட்டிக்கொள்கிற கமல்தான் நம்மை கேள்வி கேட்கத்தூண்டுகிறார். அதெப்படி சகல தீவிரவாத செயலையும் பட்டியல் போட்டு பேசிவிட்டு வெறுமனே இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் கொல்வது காமன்மேன் செய்யும் காரியமா அல்லது ஸ்டுப்பிட்மேன் செய்யும் காரியாமா ?? ( ஒரு இந்துவை கூட கொல்லுகிறாரே என்று படத்தின் கதாநாயகனை போலவே சொல்லாதீர்கள், அந்த பாத்திரமும் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கு உதவுபவராகத்தான் சித்தரிக்கப்படுகிறது). வழக்கமான தமிழ் சினிமாக்களைபோல இந்தப்படமும் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாகத்தான் இருக்கமுடியும் என்பதை மறைமுகமாக பார்ப்பவர் மனதில் பதியவைக்கிறது. தன் மனைவியும் குழந்தையும் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டதை சொல்லும் காட்சியில் கூட அது அவன் மூன்றாவது மனைவி என குறிப்பிட்டு கலவரத்தின் வீரியத்தை குறைப்பதை எதேச்சையானது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? ( ” அதான் மீதி ரெண்டு பொண்டாட்டி இருக்கே.” என்கிற வசனம் மூலம் இதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக கவனமாக நிறம் மாற்றுகிறார்கள் ) கமல் மற்ற தமிழ் படைப்பாளிகள் மாதிரி இந்து தீவிரவாத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை, ஆனால் அதை நாசூக்காக தொட்டுக்காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். அதனால்தான் அவர் பாத்திரம் குஜராத் கலவரத்திற்க்கு கண்ணீர் மட்டும் வடிக்கிறது ஆனால் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிக்கோ மரணதண்டனை வழங்குகிறது. இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்ய பயப்படும் இந்த சினிமாக்காரர்கள்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளை படத்திற்க்கு படம் துவைத்து காயப்போடுகிறார்கள், இதிலிருந்தே நாம் எந்த தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.யாரேனும் இது ஒரு ரீமேக் படம்தானே என்று சொன்னால், மன்னிக்கவும் ஹிந்திக்காரன் கொடுத்ததை வாந்தி எடுக்க உலகநாயகன் தேவையில்லை. மேலும் எடுத்த வாந்தியை சுத்தம்தான் செய்ய வேண்டும்… அது உலகநாயகனுடையதாக இருந்தாலும். படத்தில் நாம் குறிப்பிட ஒரு விசயம் உண்டு. நாயகனால் கொல்லப்படும் ஒரு தீவிரவாதி சொல்வார் , பெஸ்ட் பேக்கரியில் என் மனைவியும் பிள்ளையும் கொல்லப்பட்டபோது எந்த சாமியும் வரவில்லை என்று. படத்தில் அது வெறும் கேள்வியாக மட்டுமே முடிந்துவிடுகிறது. உண்மையில் அந்த கேள்விக்கான நம்முடைய நியாயமான பதிலில்தான் தீவிரவாத்திற்கான தீர்வும் இருக்கிறது.

கதை எல்லோரும் அறிந்ததே, அதற்க்குள் நாம் போகவேண்டாம். ஆனால் அதில் அவர் சொல்லும் நீதி முட்டாள்தனமானது, அராஜகமானது. எப்படி தீவிரவாதம் உடனடியாக மக்களை கொல்லுகிறதோ அப்படியே தீவிரவாதத்தில் ஈடுபடுவோரும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் படம் சொல்லும் பச்சையான செய்தி. கொஞ்சம் நிதானமாக யோசனை செய்து பாருங்கள், இதே கருத்தைத்தான் மத வேறுபாடு இல்லாமல் எல்லா தீவிரவாதிகளும் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஏதோ ஒரு கோபத்தின் எதிர்வினை என்றுதான் அவர்கள் செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கிறார்கள். ஒன்று இந்த கதையின் நாயகன் ஒரு வில்லனாக கருதப்படவேண்டும் இல்லவிட்டால் எல்லா தீவிரவாதிகளும் அவரளவில் ஒரு ஹீரோ என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் ( படத்தில் வரும் வசனத்தைப்போல இதற்கும் பைனரியாகத்தான் பதில் சொல்ல முடியும் ).
சரி கமல் விரும்பி ஒரு படம் பண்ணும்போது அது அவர் விரும்பிய கருத்தைத்தான் கொண்டிருக்கும். அதில் நீ எப்படி தலையிடலாம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கருத்தாகத்தான் இருந்திருக்கும்., கமல்ஹாசன் ஒரு நடிகனாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தால். தான் ஒரு முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர் என காட்டிக்கொள்கிற கமல்தான் நம்மை கேள்வி கேட்கத்தூண்டுகிறார். அதெப்படி சகல தீவிரவாத செயலையும் பட்டியல் போட்டு பேசிவிட்டு வெறுமனே இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் கொல்வது காமன்மேன் செய்யும் காரியமா அல்லது ஸ்டுப்பிட்மேன் செய்யும் காரியாமா ?? ( ஒரு இந்துவை கூட கொல்லுகிறாரே என்று படத்தின் கதாநாயகனை போலவே சொல்லாதீர்கள், அந்த பாத்திரமும் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கு உதவுபவராகத்தான் சித்தரிக்கப்படுகிறது).
வழக்கமான தமிழ் சினிமாக்களைபோல இந்தப்படமும் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாகத்தான் இருக்கமுடியும் என்பதை மறைமுகமாக பார்ப்பவர் மனதில் பதியவைக்கிறது. தன் மனைவியும் குழந்தையும் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டதை சொல்லும் காட்சியில் கூட அது அவன் மூன்றாவது மனைவி என குறிப்பிட்டு கலவரத்தின் வீரியத்தை குறைப்பதை எதேச்சையானது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? ( ” அதான் மீதி ரெண்டு பொண்டாட்டி இருக்கே.” என்கிற வசனம் மூலம் இதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக கவனமாக நிறம் மாற்றுகிறார்கள் )
கமல் மற்ற தமிழ் படைப்பாளிகள் மாதிரி இந்து தீவிரவாத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை, ஆனால் அதை நாசூக்காக தொட்டுக்காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். அதனால்தான் அவர் பாத்திரம் குஜராத் கலவரத்திற்க்கு கண்ணீர் மட்டும் வடிக்கிறது ஆனால் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிக்கோ மரணதண்டனை வழங்குகிறது. இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்ய பயப்படும் இந்த சினிமாக்காரர்கள்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளை படத்திற்க்கு படம் துவைத்து காயப்போடுகிறார்கள், இதிலிருந்தே நாம் எந்த தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.யாரேனும் இது ஒரு ரீமேக் படம்தானே என்று சொன்னால், மன்னிக்கவும் ஹிந்திக்காரன் கொடுத்ததை வாந்தி எடுக்க உலகநாயகன் தேவையில்லை. மேலும் எடுத்த வாந்தியை சுத்தம்தான் செய்ய வேண்டும்… அது உலகநாயகனுடையதாக இருந்தாலும்.
படத்தில் நாம் குறிப்பிட ஒரு விசயம் உண்டு. நாயகனால் கொல்லப்படும் ஒரு தீவிரவாதி சொல்வார் , பெஸ்ட் பேக்கரியில் என் மனைவியும் பிள்ளையும் கொல்லப்பட்டபோது எந்த சாமியும் வரவில்லை என்று. படத்தில் அது வெறும் கேள்வியாக மட்டுமே முடிந்துவிடுகிறது. உண்மையில் அந்த கேள்விக்கான நம்முடைய நியாயமான பதிலில்தான் தீவிரவாத்திற்கான தீர்வும் இருக்கிறதுகலைஞானி கமல், தீவிரவாதத்தை கண்டு மனம் வெறுத்து அதை களைய எண்ணும் ஒரு சாமான்யனின் பாத்திரத்தில் நடித்திருப்பதாக சொன்னதாலும் நான் இந்தியில் வந்த ” புதன்கிழமை ” படத்தை நான் பார்க்காததாலும் உ.போ.ஒ படம் பார்க்க போனேன். அதற்கான எனது விமர்சனம்தான் மேலே உள்ள வரிகள்.
கதை எல்லோரும் அறிந்ததே, அதற்க்குள் நாம் போகவேண்டாம். ஆனால் அதில் அவர் சொல்லும் நீதி முட்டாள்தனமானது, அராஜகமானது. எப்படி தீவிரவாதம் உடனடியாக மக்களை கொல்லுகிறதோ அப்படியே தீவிரவாதத்தில் ஈடுபடுவோரும் கொல்லப்படவேண்டும் என்பதுதான் படம் சொல்லும் பச்சையான செய்தி. கொஞ்சம் நிதானமாக யோசனை செய்து பாருங்கள், இதே கருத்தைத்தான் மத வேறுபாடு இல்லாமல் எல்லா தீவிரவாதிகளும் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஏதோ ஒரு கோபத்தின் எதிர்வினை என்றுதான் அவர்கள் செயலுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கிறார்கள். ஒன்று இந்த கதையின் நாயகன் ஒரு வில்லனாக கருதப்படவேண்டும் இல்லவிட்டால் எல்லா தீவிரவாதிகளும் அவரளவில் ஒரு ஹீரோ என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் ( படத்தில் வரும் வசனத்தைப்போல இதற்கும் பைனரியாகத்தான் பதில் சொல்ல முடியும் ).
சரி கமல் விரும்பி ஒரு படம் பண்ணும்போது அது அவர் விரும்பிய கருத்தைத்தான் கொண்டிருக்கும். அதில் நீ எப்படி தலையிடலாம் என்று கேட்கிறீர்களா? நியாயமான கருத்தாகத்தான் இருந்திருக்கும்., கமல்ஹாசன் ஒரு நடிகனாக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தால். தான் ஒரு முற்போக்குவாதி, மதச்சார்பற்றவர் என காட்டிக்கொள்கிற கமல்தான் நம்மை கேள்வி கேட்கத்தூண்டுகிறார். அதெப்படி சகல தீவிரவாத செயலையும் பட்டியல் போட்டு பேசிவிட்டு வெறுமனே இசுலாமிய தீவிரவாதிகளை மட்டும் கொல்வது காமன்மேன் செய்யும் காரியமா அல்லது ஸ்டுப்பிட்மேன் செய்யும் காரியாமா ?? ( ஒரு இந்துவை கூட கொல்லுகிறாரே என்று படத்தின் கதாநாயகனை போலவே சொல்லாதீர்கள், அந்த பாத்திரமும் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கு உதவுபவராகத்தான் சித்தரிக்கப்படுகிறது).
வழக்கமான தமிழ் சினிமாக்களைபோல இந்தப்படமும் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாகத்தான் இருக்கமுடியும் என்பதை மறைமுகமாக பார்ப்பவர் மனதில் பதியவைக்கிறது. தன் மனைவியும் குழந்தையும் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டதை சொல்லும் காட்சியில் கூட அது அவன் மூன்றாவது மனைவி என குறிப்பிட்டு கலவரத்தின் வீரியத்தை குறைப்பதை எதேச்சையானது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? ( ” அதான் மீதி ரெண்டு பொண்டாட்டி இருக்கே.” என்கிற வசனம் மூலம் இதை ஒரு நகைச்சுவைக் காட்சியாக கவனமாக நிறம் மாற்றுகிறார்கள் )
கமல் மற்ற தமிழ் படைப்பாளிகள் மாதிரி இந்து தீவிரவாத்தை முற்றிலும் புறக்கணிக்கவில்லை, ஆனால் அதை நாசூக்காக தொட்டுக்காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார். அதனால்தான் அவர் பாத்திரம் குஜராத் கலவரத்திற்க்கு கண்ணீர் மட்டும் வடிக்கிறது ஆனால் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிக்கோ மரணதண்டனை வழங்குகிறது. இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்ய பயப்படும் இந்த சினிமாக்காரர்கள்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளை படத்திற்க்கு படம் துவைத்து காயப்போடுகிறார்கள், இதிலிருந்தே நாம் எந்த தீவிரவாதம் மிகவும் ஆபத்தானது என்பதை எளிதாக அறிந்துகொள்ளலாம்.யாரேனும் இது ஒரு ரீமேக் படம்தானே என்று சொன்னால், மன்னிக்கவும் ஹிந்திக்காரன் கொடுத்ததை வாந்தி எடுக்க உலகநாயகன் தேவையில்லை. மேலும் எடுத்த வாந்தியை சுத்தம்தான் செய்ய வேண்டும்… அது உலகநாயகனுடையதாக இருந்தாலும்.
படத்தில் நாம் குறிப்பிட ஒரு விசயம் உண்டு. நாயகனால் கொல்லப்படும் ஒரு தீவிரவாதி சொல்வார் , பெஸ்ட் பேக்கரியில் என் மனைவியும் பிள்ளையும் கொல்லப்பட்டபோது எந்த சாமியும் வரவில்லை என்று. படத்தில் அது வெறும் கேள்வியாக மட்டுமே முடிந்துவிடுகிறது. உண்மையில் அந்த கேள்விக்கான நம்முடைய நியாயமான பதிலில்தான் தீவிரவாத்திற்கான தீர்வும் இருக்கிறது.

ஆண்மைக்குறைவினால் இனிமேலும் பெண்கள் வாழ்வு பாதிக்கப்படக்கூடது – அட சொல்றது டாக்டர் சிவராஜ் சிவகுமார் இல்லைங்க, நம்ம மனோரமா ஆச்சிதான்

இந்த வார குங்குமத்தில் ஆச்சி மனோரமா தான் முப்பது ஆண்டு காலமாக மனதில் அடக்கிவைத்து இருந்த மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். அதாகப்பட்டது, ஆண்மைக்குறைவுடைய ஆண்கள் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாகவும், எனவே திருமணத்திற்கு முன் பரஸ்பரம் மருத்துவ சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் எனவும், ஆண்மைக்குறைவோடு பெண்களை ( ஏமாற்றி ) திருமணம் செய்யும் ஆண்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்காக ஒரு தனி அமைப்பை தொடங்கப்போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். இனியும் இந்த கருத்தை வெளியிடாமல் இருந்தால் தான் பெண்ணாக பிறந்தததே அர்த்தமற்றதாகிவிடும், எனவே இனி தன் வாழ்வில் மீதம் இருக்கும் நாட்களை இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்த பெண்களின் விடிவுக்காக செலவிடப்போவதாக கூறி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். இதே கருத்தை வலியுறுத்தி அவர் முதல்வரிடமும் ஒரு மனு கொடுத்திருக்கிறார்.
ஆச்சி., வாலிப வயோதிக அன்பர்களே என்ற வார்த்தைகளை பயன்படுத்தாததாலும், அவருக்கு லேகியம் விற்பனை செய்யும் யோசனை ஏதும் இருப்பதற்கான அறிகுறி ஏதும் அந்த பேட்டியில் தெரியாததாலும், நாம் அவரது கருத்துக்களை பரிசீலிகத்தான் வேண்டும். ஒரு தனி இயக்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு ஆண்மைக்குறைவு என்ன சர்வதேச பிரச்சினையா ? ஆச்சி குறிப்பிடுவதைப்போல பெருகிவரும் விவாகரத்திற்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு தான் காரணமா ?
சரி, மனோரமா மீதான தனிப்பட்ட அன்பினால் முதல்வரே இவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவே வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், வாலி தலைமையில் ” ஆண்மையை ஆராயச்சொல்லி சட்டம் போட்ட ஆதவனே ” என்கிற தலைப்பில் கவியரங்கம் நடக்கும், டாக்டர் நாராயண ரெட்டி, காமராஜ் ஆகியோர்களின் மருத்துவமனை டோக்கன்களை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அராஜகமான வழிகளில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்பதாக ஜெயலலிதா அறிக்கை விடுவார், மருத்துவப்பரிசோதனையின் முடிவுகள் திமுக வினருக்கு மட்டும் பாசிடிவ் என்று வரும்படி கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக விஜயகாந்த் குற்றம் சாட்டுவார். இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கும் ?
முதலில் ஆண்மைகுறைவு என்பதற்க்கு ஒரு முழுமையான வரையரை இதுவரை கிடையாது. இனியும் அது முடியாது. ஆச்சி குறிப்பிடும் ‘ ஆண்மை ‘ என்பது ஒரு ஆணின் பண்பியல் தொகுப்பு ( personality ) , வளர்க்கப்பட்ட முறை, இல்லத்துணை மீதான ஈர்ப்பு, அவரது புறச்சூழல் என ஏராளமான காரணிகளை உள்ளடக்கியது. ஒரு மருத்துவர் இதை சோதனை செய்து அறிக்கை அளிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது.
பெரும்பாலான விவாகரத்துக்களுக்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு ஒரு காரணமாக இருப்பது இல்லை. தம்பதிகளிடையேயான புரிதலில் உள்ள முரண்பாடும் தன் இல்லத்துணைக்கான குறைந்தபட்ச அன்பையும் மரியாதையையும் தரத் தவறுவதும்தான் மிகப்பெரும்பாலான விவாகரத்துக்களுக்கு காரணமாக இருக்கிறது. கள்ளக்காதலின் கதை வேறு, முறையற்ற காதல் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான். பத்திரிக்கைகள் அதற்கு அளிக்கும் அதீத முக்கியத்துவம்தான் இதை ஒரு பெரிய சமூக சிக்கலாக காட்டுகிறது. ( சரியாக கவனியுங்கள்.. சாதாரண மனிதனின் முறையற்ற காதல்தான் கள்ளக்காதல் என குறிப்பிடப்படுகிறது.. பிரபுதேவா & நயன் தாரா உறவை காதல் என்றுதான் எல்லா பத்திரிக்கையும் எழுதுகிறது).
திருமணமாகும் பெண்கள் மட்டும் ஏமாற்றப்படுவதில்லை. காதலிலும் ஏமாற்றப்படுகிறார்கள். காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் நல்ல?! ஆண்மையுள்ள ஆண்களால்தான் கைவிடப்படுகிறார்கள்.
ஆண்மை இல்லாமல் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள், எனவே ஆண்மை         உள்ளவன்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் ( கட்டாய பரிசோதனை என்பதன் பொருள் இதுதான்)., ஆண்மை உள்ளவன் காதலித்து ஏமாற்றுகிறான் (பலர் தன் ஆண்மையை காதலியிடம் பரிசோதித்துவிட்டுத்தான் கைவிடுகிறார்கள்- ஒருவகையில் இவர்கள் ஆச்சியின் யோசனையை 50% கடைபிடிக்கிறார்கள்). எனவே இதைத்தடுக்க காதலிப்பவனுக்கு ஆண்மையே இருக்கக்கூடாது என ஒரு சட்டம் போடலாமா ? இதற்கு நிகரான மடத்தனம்தான் ஆச்சி வைக்கும் கோரிக்கையும்.
பெண்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் என்கிற மனோரமாவின் நோக்கம் நியாயமானது. அதில் தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கமுடியாது. ஆனால் அவர் பிரச்சினைக்கு சொல்லும் காரணமும் அதற்கான தீர்வும் நகைப்புக்குரியவை. தனி இயக்கம் காணவேண்டிய அளவுக்கு கடுமையான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏராளம் உண்டு. அதற்கு போராட முன்வந்தால் ஆச்சி பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு… ஆச்சியை பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு.
%d bloggers like this: